மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் 24 வெள்ளியன்று மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் ஒரே நாளில் 115 மாணவர்களுக்கு ரூ.15 கோடி அளவிற்கான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சு.வெங்கடேசன் எம்.பி., ஆற்றிய உரையின் சாராம்சம்:
“இது ஒரு முக்கியமான நாள். மதுரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தொகுதியில் பல்வேறு பணிகளை செய்கின்றோம். அனைத்துப் பணிக ளும் முக்கியமானவைதான் என்றாலும், அதில் சில பணிகளை, மிக முக்கியப் பணிகளாக தேர்ந்தெடுக்கின்றோம். அவை மாணவர்கள் சார்ந்த பணிகளா கும். கடந்த நான்கரை ஆண்டுகளாகவே இதனை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று நாடாளுமன்ற உறுப்பினராக கல்விக்கான நிலைக்குழு உறுப்பி னராக இருந்து செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றேன், அதில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து அதில் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை செயல்படுத்த வேண்டும். அப்படி கல்விக்குழு உறுப்பி னராக இருக்கக்கூடிய நான் தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்த மாவட்டமாக மதுரை யினை மாற்றிக்காட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளேன்.
லட்சத்தீவு மையம் மதுரையானது
அந்த வகையில், ஒன்றிய அரசு தேர்வாக இருந்தாலும் சரி- தமிழக அரசின் தேர்வாக இருந்தாலும் சரி- அதில் மாணவர்களுக்கு இழைக்கப் படும் அநீதிக்கு எதிராக மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் உடனடியாக தலையீடு செய்து வருகின் றேன். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.
மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மத்திய பல்கலைக்கழ கத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்தி ருந்தார். அவருடைய தேர்வு மையம் லட் சத்தீவு என்று போட்டு அனுப்பி இருந் தார்கள். ஒரு நாள் இடைவெளியில் அவ ருக்கான தேர்வு மைய விண்ணப்பம் வரு கிறது. 12 மணி நேரத்தில் அதற்கான தலையீடு செய்து மதுரையிலேயே அந்த மாணவன் தேர்வு எழுதுவதற்கான மையத்தை உருவாக்கி கொடுத்தோம் என்பதை பெருமையோடு சொல்கிறோம். அதேபோல் மாணவர்களுக்கான பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.
படிப்பு பூங்கா
மதுரை காந்தி அருங்காட்சியகம் அரு கில் போட்டித் தேர்வு மாணவர்கள் படிப்ப தற்கான வளாகத்தை உருவாக்கியுள் ளோம். இந்தியாவிலேயே மதுரையில் தான் படிப்பதற்கு என்று ஒரு பூங்காவை உருவாக்கியுள்ளோம். அந்த பூங்காவை பார்த்துவிட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மிக அழகாக அருமையாக உள்ளது. சென் னையிலும் இதேபோல் ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார்.
இரண்டு தினங்களுக்கு முன், விருது நகர் புத்தகத் திருவிழாவிற்கு சென்று இருந்தேன். அப்போது மதுரையில் நீங்கள் அமைத்ததுபோல் விருதுநகரி லும் ஒரு பூங்காவை நாங்கள் படிப்பதற்கு அமைத்துள்ளோம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் புகைப் படத்தை காட்டினார். இது பெரும் மகிழ்ச்சி யாக இருந்தது.
மும்பையில் 90 சதவீதம் கல்விக்கடன்
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்விக் கடன் கொடுப்பதில் கூட நாம் மிகவும் குறைவாக இருந்தோம். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 90 சதவிகிதம் பேருக்கு கல்விக்கடன் கிடைக்கிறது.
மும்பையில் 90 சதவிகிதம் கொடுக் கும்போது, தமிழ்நாட்டில் உள்ள நகரங்க ளுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? மதுரை யில் ஏன் கொடுக்கக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை காண முயற்சித்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கித் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் இணைந்து தொடர் கவனம் செலுத்தி தயாரிப்புக் கூட்டங்களை நடத்தி விரி வான முகாம்களுக்கு திட்டமிட்டோம்.
மதுரை மாவட்டத்துக்கு முதல்வர் விருது
2021-ஆம் ஆண்டு முதல் கல்விக் கடனுக்கான முகாம்களை நடத்துகி றோம். அதற்கு முன்பு வரை கல்விக் கடன் கொடுப்பது ரூ.40 கோடி, ரூ.45 கோடி என்பதாக இருந்தது. 2021-ஆம் ஆண்டு நாம் எடுத்த முயற்சியால் மதுரை மாவட்டத்தில் ரூ. 118 கோடி அளவிற்கு கல்வி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நூறு கோடிக்கு மேல் கல்விக்கடன் பெற்றுக்கொடுத்த முதல் மாவட்டமாக மதுரை மாவட்டம் மாறியது.
அதேபோல 2022-ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்த கல்விக்கடன் என்பது 138 கோடி ரூபாய் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கி றேன். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்ட கல்விக் கடன் என்பது 1100 கோடி ரூபாய். அதில் 10 சதவிகிதம் 138 கோடி ரூபாயை மதுரையில் மட்டுமே பெற்று கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெருமை இங்கு உள்ள வங்கி அதிகாரி களையும், மாவட்ட நிர்வாகத்தையும் சாரும். அவர்களுக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகள் வந்துள்ள னர். அதேபோல் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் வந்துள்ளனர். அவர்களின் முயற்சி இதில் உள்ளது, மதுரை மாவட் டத்தின் நிர்வாகத்திற்கு தமிழக அரசின் சார்பில் கல்விக் கடன் வழங்கியதில் முதல் மாவட்டமாக திகழ்வதற்காக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு, ஆட்சி யர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் விருது வழங்கியுள்ளார்.
அசாம் மாநிலத்தை விட அதிகம்
\கடந்த ஆண்டு இந்தியாவில் 7 வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநி லத்தை தவிர்த்து மற்ற 6 மாநிலங்களில் வழங்கப்பட்ட கல்விக் கடனை விட நம்மு டைய மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு வழங்கப்பட்ட கல்விக் கடன் அதிகம் என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டி ருக்கிறேன். அந்த மாநிலங்களில் அசாம் மட்டும் ரூ. 98 கோடி கல்விக் கடன் வழங்கியுள்ளது. ஆனால் அசாம் மாநி லத்தை விட நம் மதுரை மாவட்டத்தில் கொடுத்த கல்விக்கடன் அதிகம்.
சிலர் என்னிடம் கேட்கிறார்கள், இவ்வளவு பேருக்கு கல்விக் கடன் வாங்கிக் கொடுக்கிறீர்களே, இது அவர்க ளுக்கு ஒரு நெருக்கடியாக மாறாதா?
அவர்களுக்கு நான் அளிக்கும் பதில் என்பது, இந்த கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை என்றால், அந்த மாணவர் கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுவார். இல்லையென்றால் வெளி நபர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி கல்லூரி வாழ்வை தொடர்வார். அவ்வாறு வெளியில் வட்டிக்குக் கடனை வாங்கி தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் குடும்பம், பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. அதிலி ருந்து தவிர்க்கத்தான் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெற்றுத்தருகிறோம்.
நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம்
வங்கிகள் மூலம் கடன் பெற்றுக் கொடுத்தால் அது மிகப்பெரும் பயனை உருவாக்கும். கல்விக்காக செய்யும் முதலீடு, முதலீடு அல்ல; அது மனித வளத்திற்கு செய்யப்படும் முதலீடாகும். இன்றைக்கும் மதுரை மாவட்டத்தில் வட்டிக்கு பணம் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்கள் கடனிலிருந்து மீள வேண்டும் என்றால், வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் மருத்துவம், பொறி யியல், பல் மருத்துவம் மற்றும் வேளாண்மை போன்ற படிப்புகளுக்கு கொடுக்கக்கூடிய கடனுக்கு அவர்கள் படித்து முடிக்கும் வரை வட்டி கிடையாது. அதற்கான வட்டியை ஒன்றிய அரசே கொடுக்கும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம், கல்விக்காக கொடுக்கும் கடனையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் நாடாளு மன்றத்திலும் பேசுகின்றேன். இங்கே யும் பேசிக் கொண்டு வருகிறேன். இது மாணவர்களின் கல்விக்காக கொடுக்கும் கடன் அல்ல. இது இந்த நாட்டின் வளர்ச் சிக்கான மூலதனம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.40 லட்சம் வரை பிணையில்லா கடன்
இதேபோல் மதுரை மாவட்டம் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தி யுள்ளது. கல்விக்கடன் வழங்குவது நான்கு லட்சம் வரைதான் பிணையில்லா மல் வழங்க முடியும். ஆனால் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா-வில் ஒரு சிறப்பு திட்டம் இருக்கின்றது. அதில், பிணையோ அடமானமோ இல்லாமல் ரூ. 40 லட்சம் வரை கல்வி கடன் பெறலாம். நீங்கள் கல்விச் சான்றிதழ் மட்டும் கொடுத்தால் போதும். அதேபோல் உலகத்தில் உள்ள சிறந்த 150 பல்கலைக்கழகங்களை அவர் கள் தேர்வு செய்துள்ளார்கள். அதில் அவர் கள் நுழைவுத் தேர்வில் தேர்வாகி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிணை இல்லாமல் அவர்கள் எடன் கொடுப்பார்கள்.
இப்படி ஒரு திட்டம் இருப்பது பலருக்கு தெரியாது. 2021-ஆம் ஆண்டு அவனியாபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற மாணவன் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தேர்வா னதால் 45 லட்சம் ரூபாய் பிணையே இல் லாமல் கல்விக்கடன் வழங்கினர். அதுதான் தமிழ்நாட்டில் முதல் பிணை இல்லா கல்விக் கடன். அவை பல்வேறு நாளிதழ்களில் செய்தியாக வெளியாகியது.
அதை பார்த்த மதுரை மீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி சிந்து, அவருடைய தந்தை ஒரு சாதாரண ஸ்டவ் ரிப்பேர் செய்யும் தொழிலாளி. அந்த தொழிலாளியின் மகள் இங்கி லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழ கத்திற்கு நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அவருக்கு எந்த ஒரு பிணையும் இல்லாமல் 38 லட்சம் ரூபாய் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழங்கி யுள்ளது.
இந்தியாவிலேயே சாதனை முகாமாக...
அப்படி தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாகவும் மதுரையில்தான் மிகப்பெரிய கல்வி கடனை நாம் வழங்கி யுள்ளோம். இவைகள் எல்லாம் கடந்த காலத்தில் நாம் நிகழ்த்தியுள்ள முக்கிய மான சாதனையாகும். அதைவிட மிகப் பெரும் சாதனையை இந்த ஆண்டு மாநில நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் வங்கி களும் செய்ய உள்ளன.
இந்த ஆண்டு நடக்கும் கல்விக் கடன் முகாம் இந்தியாவிலேயே கல்விக் கடனில் சாதனை படைக்கக் கூடிய ஒரு முகாம். 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டு களில் கொடுத்த கல்விக் கடன் சாதனை யை விட இன்றைக்கு நாம் கல்விக் கடனாக கொடுக்கக்கூடிய காசோலை கள் இதுவரை தமிழ்நாட்டில் எங்கும் நடக்காதது 16 வங்கிகளின் சார்பில் ஒரே நாளில் 14 கோடியே 56 லட்சம் ரூபாயைக் கல்விக் கடனாக கொடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டிலேயே 15 கோடி ரூபாய் கல்விக் கடன் கொடுக்கும் முகாமாக இந்த முகாம்தான் இருக்கும். இந்தியா விலும் இதுதான் முதல் முகாமாக இருக்க லாம் என்பதை தெரிவித்துக் கொள்கி றேன்.
இன்றைய முகாமில் (நவம்பர் 24) வழங் கப்பட்ட கல்விக் கடன் விபரம்: கனரா வங்கி - 15நபர்களுக்கு ரூ. 4 கோடியே 51 லட்சத்து25 ஆயிரம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரீஜினல்I - 12 பேருக்கு ரூ. 23 லட்சம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரீஜினல்IV- 5 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 5 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரம், இந்தியன் வங்கி 20 பேருக்கு ரூ. 1 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரம், பேங்க் ஆப் இந்தியா - 15 நபர்களுக்கு ரூ. 92 லட்சத்து 97 ஆயிரம், பேங்க் ஆப் பரோடா - 8 நபர்களுக்கு ரூ. 2 கோடி 41 லட்சத்து 92 ஆயிரம், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 6 பேருக்கு ரூ. 32 லட்சத்து 46 ஆயிரம், எச்டிஎப்சி வங்கி - 2 பேருக்கு ரூ. 7 லட்சத்து 59 ஆயிரம், பெட ரல் பேங்க் - ஒரு நபருக்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் என மொத்தம் 115 மாணவர்களு க்கு ரூ. 14 கோடியே 55 லட்சத்து 98 ஆயிரம் கல்விக் கடனாக முகாமில் வழங்கப் பட்டுள்ளது.
கல்வியில் முதல் மாவட்டமாக...
இவை தவிர இன்றைக்கு வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு சொல்லக் கூடியது ஒரே ஒரு செய்திதான். அது மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்த விஷயம் அல்ல; ஒரு குடும்பம் சார்ந்து ஒரு தலைமுறை சார்ந்த விஷயம். அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் விஷயத்தில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை மாநில அரசும், ஒன்றிய அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் வலியுறுத்துவேன். மேலும் தொடர்ந்து அதை செய்து தர வேண்டும் என்றும் போராடுவேன்.
மாநிலத்திலேயே கல்விக்கடன் கொடுக்கும் முதல் மாவட்டமாக மதுரை யை மாற்றி இருக்கின்றோம். ஏனென் றால் நாடாளுமன்ற நிலைக் குழுவில் இதற்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதற்காக வங்கிகள் இன்றைக்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளன. அதேபோல் நம்முடைய மாநிலத்தில் 58 சதவிகித மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். அதில் மதுரை மாவட்டம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த ஆண்டு பள்ளியை முடித்து கல்லூரிக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 2,200 பேர். அதனை கண்டுபிடித்து ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை? குடும்பச் சூழலா? கல்லூரிக் கட்டணம் கட்டமுடிய வில்லையா என்று ஆய்வுகள் நடத்தி அதில், 1300 பேரை கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் பெரும் முயற்சிகளை எடுத்துள் ளது. அந்த அடிப்படையில் மதுரை மாவட் டம் கல்வியில் முதல் மாவட்டமாக இருக்க வேண்டும் என்ற முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனை வருக்கும் நன்றி.